முகப்பேர் மேற்குப் பகுதியில் இருந்து அம்பத்தூர் செல்வதற்கு நேரடி பேருந்து வசதி இல்லை. மேலும் நொளம்பூர், மதுரவாயல், ஐயப்பன்தாங்கல், பூந்தமல்லி வழியாக திருவள்ளூருக்கு பேருந்து விடப்பட்டால் ஏராளமான மக்கள் பயன்படுத்துவதோடு, அரசுக்கும் வருவாய் அதிகரிக்கும். அதேபோல், ஏற்கெனவே இயக்கப்பட்டு வந்த 41சி, எம்27சி ஆகிய தடம் எண் பேருந்துகள் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டன. அவற்றை மீண்டும் இயக்குவதற்கு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செல்வி ரமேஷ், முகப்பேர் மேற்கு.