சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தின் நுழைவுவாயிலில் இருந்து சிக்னல் வரை செல்லும் நடைபாதை, நடப்பதற்கு ஏதுவாக இல்லை. அந்த நடைபாதையின் சிமெண்ட் பலகைகள் பெயர்ந்து அப்படியே கிடக்கின்றன. இதனால் முதியோர் உள்ளிட்ட பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். நடப்பவர்களின் பாதுகாப்பு கருதி நடைபாதையை சீரமைக்க பெருநகர மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருநாவுக்கரசு, வேப்பேரி.