சென்னை திருமங்கலம் வி5 காவல் நிலையம் அமைந்துள்ள பள்ளி சாலையில் ஒரு பிரபலமான தனியார் பள்ளி உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயிலுகின்றனர். இப் பள்ளிக்கு அருகில் உள்ள பகுதிகளில் இருந்து, ஏராளமான பெற்றோர், தங்கள் குழந்தைகளை வாகனங்களில் காலை, மாலை நேரங்களில் அழைத்துச் செல்கின்றனர். கொளத்தூர், பெரம்பூர், வில்லிவாக்கம், புழல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாணவர்களை அழைத்து வரும் பெற்றோர்களால், திருமங்கலம் சென்று மூன்று கி.மீ. தூரம் பயணித்த பிறகே பள்ளியை அடைய முடிகிறது. எனவே, பள்ளி சாலைக்கு எதிரே வழியை ஏற்படுத்தி, பெற்றோர்கள் வந்து செல்லும் வகையில் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நித்திலா செல்வராஜ், பாடி.