சென்னை அனகாபுத்தூரில் இருந்து பல்லாவரம் வரை செல்லும் வழித்தடத்தில் மொத்தம் ஐந்து பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. ஆனால், இந்த ஐந்து நிறுத்தங்களிலும் ஒரு பேருந்து நிழற்குடை கூட அமைக்கப்படவில்லை. இதனால், பயணிகள் வெயிலிலும், மழையிலும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே, இந்த ஐந்து இடங்களிலும் பேருந்து நிழற்குடைகளை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஓ.வாணிஸ்ரீ, அனகாபுத்தூர்.