மாம்பலம் ரயில் நிலையத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள் அங்கேயே திறந்த வெளியில் எரிக்கப்படுகின்றன. அதனால் பயணிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
குப்பைகள் எரிக்கப்படுவதால் சுற்றுப்புறம் மாசுபடுவதுடன் காற்று மாசு படுதலுக்கு வழிவகுக்கிறது. சேகரிக்கப்படும் குப்பைகள் தொட்டியில் கொட்டுவதற்குப் பதிலாக அங்கேயே எரிக்கப்படுகின்றது. மாம்பலம் ரயில் நிலைய ஊழியர்கள் சிறிதும் சமூகப் பொறுப்பின்றி விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சி.சம்பத், கே.கே.நகர்.