சென்னை அடையாறு மகாத்மா காந்தி சாலையிலிருந்து டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலைக்கும், சாஸ்திரி நகருக்கும் 2 சாலைகள் பிரிந்து செல்கின்றன. இந்த இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் சண்டை, வாக்குவாதம் தினமும் நடைபெறுவதால் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்கிறது. ஆகவே இப்பகுதியில் வேகத்தடை அமைத்தால் எல்லோருக்கும் பயனுள்ளதாய் இருக்கும். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜி.ராஜகுரு, திருவான்மியூர்.