வில்லிவாக்கத்தைச் சுற்றியுள்ள நாதமுனி, நியூ ஆவடி சாலை, ரயில்வே சுரங்கப்பாதை,பெருமாள்கோயில் தெரு ஆகிய இடங்களில் அதிகாலை கூடுதல் விலை மது விற்பனை நடைபெறுகிறது. இதனால் குடிமகன்களால் இப்பகுதியில் அனைத்துத் தரப்பினரும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். குடிமகன்கள் தொடர்பாக காவல்துறையில் புகார் கொடுக்கச் சென்றால் அதை வாங்கவும் மறுக்கின்றனர். காவல்துறை உயர் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி இப்பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஸ்ரேயா தமிழரசு, வில்லிவாக்கம்.