திருவொற்றியூரில் பல தெருக்களில் மாடுகள் சுற்றித் திரிகின்றன. வடக்கு மாட வீதியில் அதிகாலையில் சாலையில் மாடுகள் சாணத்தைப் போடுவதால் பலர் அதில் காலை வைத்து வழுக்கி விழுகின்றனர். மாடு வளர்ப்போர் காலை நேரத்தில் அவற்றைக் கட்டி வைத்தால் நல்லது. மாநகராட்சி அதிகாரிகள் இந்தப் பிரச்னையில் கவனம் செலுத்த வேண்டும்.
பி.கே. ஈசுவரன், சென்னை.