சென்னை புழல் ஏரியில் இருந்து பூமிக்கடியில் குழாய் பதித்து கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக சென்னை குடிநீர் வடிகால் வாரியம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தனியார் நிலங்களைக் கையகப்படுத்தியது. இப்போது அந்நிலங்களை ஏராளமானோர் ஆக்கிரமித்து குடியிருப்புகள், வணிக வளாகங்கள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளனர். சிலர் நிலங்களை விற்பனை செய்து வருகின்றனர்.
பூமிக்கடியில் குடிநீர் குழாய் பதித்துள்ள நிலத்தின் மேல் கட்டடங்கள் கட்டும் போது பல இடங்களில் குடிநீர் குழாய்கள் உடைகின்றன. இதனால் பல இடங்களில் குடிநீர் வீணாகின்றது. உடைந்த குழாய்கள் மீது கட்டடங்கள் உள்ளதால் குடிநீர் குழாய்களை சரி செய்ய முடியாத நிலை உள்ளது . எனவே சென்னை குடிநீர் வாரிய ஆணையர் ஆக்கிரமிப்பு நிலங்களை ஆய்வு செய்து அரசுக்குச் சொந்தமான பல கோடி மதிப்புள்ள நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
எஸ்.கனகராஜ், சென்னை.