சென்னை முகப்பேர் மேற்கு, மோகன்ராம் நகரில் நாய்த் தொல்லை அதிகமாக உள்ளது. இப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களும், சிறுவர்களும் வெறிநாய்த் தொல்லையால் அவதிப்படுகின்றனர்.
மேலும், இந்த நாய்கள் துரத்துவதால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் விபத்துக்கு ஆளாகின்றனர். இப்பிரச்னையில் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எம்.மோகன், முகப்பேர் மேற்கு.