ஆராய்ச்சிமணி
தார்ச்சாலை போடப்படுமா?
சென்னை கொளத்தூர் 5-ஆவது தெருவில் குழாய்கள் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு சரியான முறையில் மூடப்படாமல் உள்ளது.
சென்னை கொளத்தூர் 5-ஆவது தெருவில் குழாய்கள் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு சரியான முறையில் மூடப்படாமல் உள்ளது. இதனால் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், வாகனங்கள் செல்வதற்குத் தடங்கலாக உள்ளது. மேலும், வயதானவர்கள் தடுக்கி விழும் அபாயமும் உள்ளது. இந்தச் சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் அதிக இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். ஆகவே இந்தச் சாலையைச் செப்பனிட்டு தார்ச்சாலை போட ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தணிகைமணியன், கொளத்தூர்.