பெருநகர சென்னை மாநகராட்சியின் 129-ஆவது கோட்டத்துக்கு உள்பட்ட சாலிகிராமம் பாஸ்கரன் காலனியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இக்குடியிருப்புகளுக்கு சென்னை பெருநகர குடிநீர் வழங்கல், கழிவு நீரகற்று வாரியம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்கான கட்டணத்தை கே.கே.நகர் கோட்ட அலுவலகத்தில் கட்ட வேண்டியுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு சாலிகிராமத்தில் குடிநீர் வாரிய கோட்ட அலுவலகம் கட்டுவதற்கான பணிகள் பல ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டு, அப்பணி கிடப்பில் போடப்பட்டுவிட்டது. இதனால், அப்பகுதி மக்கள் குடிநீர் கட்டணத்தை உரிய காலத்தில் செலுத்த முடியாமல் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். நிலுவையில் உள்ள குடிநீர் வாரிய அலுவலக கட்டுமானப் பணியை விரைந்து தொடங்கி பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
சாலிகிராமம், வடபழனி குடியிருப்புவாசிகள்.