திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி, சென்ட்ரல், கடற்கரை இடையே கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும். திருவள்ளூர்-அரக்கோணம் இடையே நான்கு ரயில் பாதைகள் இருந்தும் புதிய ரயில்கள் இயக்கப்படவில்லை. அனைத்து ரயில்களிலும் 12 பெட்டிகள் இணைக்கும் பணியிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற குறைகளைக் களைந்து கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும்.
- எஸ்.வைத்தியநாதன், ஆவடி.