ஜமீன் பல்லாவரம், பல்லவன் கார்டன் 8-ஆவது அவென்யூவில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் தெரு விளக்குகள் பொருத்தப்பட்டன. அன்றிலிருந்து இன்று வரை தெரு விளக்குகள் அணைக்கப்படாமல் இரவும் பகலும் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கின்றன. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் நகராட்சி கண்டுகொள்வதில்லை. மேலும், இங்குள்ள ஒவ்வொரு தெருவிலும் குறைந்தது 20 நாய்கள் உலா வருகின்றன. இரவு நேரத்தில் இந்த நாய்கள் குரைப்பதும், ஊளையிடுவதுமாக இருப்பதால் இங்குள்ள மக்களால் நிம்மதியாக உறங்க முடிவதில்லை. இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஐயம்பெருமாள், ஜமீன் பல்லாவரம்.