ஆவடி கோவில் பதாகை பகுதியைச் சேர்ந்த அசோக்நகர் பகுதியில் முறையாக அனுமதி பெற்று, கடந்த 17 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். அரசுக்கு அனைத்து வரிகளையும் செலுத்தி வருகிறோம். எங்கள் பகுதியில் மத்திய, மாநில அரசுத்துறை பணியாளர்கள் ஏராளமானோர் குடியிருக்கின்றனர். ஆனால், எங்களுக்கு இதுவரை சாலை வசதியும், போக்குவரத்து வசதியும் இல்லை. இதே நிலை நீடித்தால், வருங்காலத்தில் நடைபெற உள்ள தேர்தல்களைப் புறக்கணிக்கப் போவதாக கருத்து உருவாகி வருகிறது. இதை அரசும், ஆவடி பெருநகராட்சியும் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
எம்.மெய்ஞானமூர்த்தி, கோவில் பதாகை.