சென்னை பிரகாசம் சாலையில் முத்தியால்பேட்டை காவல் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாமல் உள்ளது. இதனால், வெயிலிலும் மழையிலும் நிற்க இடமில்லாமல் பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே, இங்கு நிழற்குடை அமைக்க மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே.ஆர்.இரவீந்திரன், சென்னை-1.