சென்னையில் உள்ள கூவம் ஆற்றங்கரை ஓரங்களை ஆக்கிரமித்து குடிசைகள் கட்டி வசித்து வந்த ஏழை, எளிய மக்களை வெளியேற்றி வேறு இடங்களில் குடியமர்த்தி வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் கூறி உள்ளார். அதேபோல், வசதி படைத்த பலரும் விருகம்பாக்கம் மழைநீர் கால்வாய் ஓரங்களை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ளனர். இதனால், மழை வெள்ளக் காலங்களில் மழைநீர் செல்ல வழியில்லாமல் ஊருக்குள் மழைநீர் புகுந்துவிடுகிறது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றவும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆர்.மரியப்பிரகாசம், சென்னை-94.