மேம்பாலப் பணி விரைவுபடுத்தப்படுமா?

ஆவடி காமராஜர் நகர் - கண்ணப்பாளையம் இடையே ரூ. 6.60 கோடி செலவில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கியது.


ஆவடி காமராஜர் நகர் - கண்ணப்பாளையம் இடையே ரூ. 6.60 கோடி செலவில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கியது. ஆனால், இதுவரை மேம்பாலப் பணிகள் நிறைவடையவில்லை. ஒவ்வொரு மழைக்காலத்திலும் பழுதான தரைப் பாலத்தின் மேல் மழைநீர் ஓடுவதால் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் செல்ல முடிவதில்லை. இதனால் மேல்பாக்கம், மேட்டுப்பாளையம், ஆயில்சேரி, சோராஞ்சேரி, அணைக்கட்டு, பாரிவாக்கம், சித்துக்காடு மக்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, அவர்கள் பல கி.மீ. சுற்றிக்கொண்டுதான் ஆவடி, பூந்தமல்லி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பி.முரளிகிருஷ்ணன், பருத்திப்பட்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com