ரயில்வே துறை பராமரிக்காத சாலை

குரோம்பேட்டை ரயில் நிலையத்தையொட்டி தென்னக ரயில்வே மூலம் பராமரிக்கப்படும் ஸ்டேஷன் பார்டர் சாலை, குரோம்பேட்டையின் கிழக்குப் பகுதியில் வசிக்கும் மக்களால் அதிக அளவில் பயன்படுத்தப்படும் மிக


குரோம்பேட்டை ரயில் நிலையத்தையொட்டி தென்னக ரயில்வே மூலம் பராமரிக்கப்படும் ஸ்டேஷன் பார்டர் சாலை, குரோம்பேட்டையின் கிழக்குப் பகுதியில் வசிக்கும் மக்களால் அதிக அளவில் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான சாலையாகும். ஆனால், இந்தச் சாலையை ரயில்வே துறையினர் முறையாகப் பராமரிப்பதில்லை. குண்டும், குழியுமாக இருப்பதோடு, மழைக்காலங்களில் தண்ணீரும் தேங்குகிறது. இதனால் இச்சாலையைப் பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் திணறுகின்றனர். எனவே, இச் சாலையைப் பராமரிக்க தென்னக ரயில்வே துறையால் முடியாவிட்டால், பல்லவபுரம் நகராட்சியிடம் ஒப்படைத்துவிட வேண்டும்.

வி.சந்தானம், குரோம்பேட்டை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com