வடசென்னையைச் சேர்ந்த ஏராளமானோர் வந்துபோகும் ஸ்டான்லி மருத்துவமனை அருகே இருந்த பேருந்து நிறுத்தத்தை இடம் மாற்றியுள்ளனர். இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளும், முதியோரும் நீண்ட தூரம் நடந்து, பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே, ஏற்கெனவே இருந்தபடி மருத்துவமனைக்கு அருகிலேயே பேருந்து நிறுத்தத்தை மீண்டும் அமைக்க, போக்குவரத்துத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே.ஆர்.இரவீந்திரன், சென்னை-1.