சென்னையின் பல இடங்களில் தெருப் பெயர்களும், வீட்டு இலக்கங்களும் குழப்பமாகவே காணப்படுகின்றன. இதனால் வீடு தேடி வருபவர்களும், தபால்காரர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள். எனவே, பழைய எண்கள், புதிய எண்கள் என்று குழப்பாமல் வரிசையாக வீட்டு இலக்கங்களை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, தெருவோரங்களில் பெயர்ப் பலகைகளும், திசைகாட்டிகளும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் வீடு தேடி அலையும் குளறுபடிகளைத் தவிர்க்க முடியும்.
பி.கே.ஈஸ்வரன், சென்னை.