ஆவடி பெருநகராட்சிக்குட்பட்ட ஸ்ரீ சக்தி நகருக்கு வடக்கில் உள்ள தாமரைக் குளக்கரையில் பூங்கா அமைக்க மூன்றாண்டுகளுக்கு முன் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் நடைமேடை மட்டும் அமைக்கப்பட்ட நிலையில், பூங்கா பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. சமீபத்தில் தொடங்கப்பட்ட பருத்திபட்டு பூங்கா, செந்தில் நகர் பூங்கா ஆகியவற்றின் பணிகள் நிறைவடைந்து அவை திறக்கப்பட்டுள்ள நிலையில், குளக்கரை பூங்கா பணிகளை இனியும் தாமதிக்காமல் முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நா.சுந்தர், ஆவடி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.