ஆவடியில் இருந்து சேத்துப்பட்டு, காலேஜ் ரோடு, ராயப்பேட்டை வழியாக இயக்கப்பட்ட தடம் எண் 24சி பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் கல்லூரி மாணவர்கள் மற்றும் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே 24சி பேருந்துகளை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆர்.வெங்கடாஜலபதி, திருமுல்லைவாயில்.