சென்னை முகப்பேர் மேற்கில் இருந்து மந்தைவெளி வரை இயக்கப்பட்டு வந்த தடம் எண்.41சி மாநகரப் பேருந்து நிறுத்தப்பட்டுவிட்டது. இதை மீண்டும் இயக்கக் கோரி பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. காலை நேரத்தில் பணிக்குச் செல்லும் ஏராளமான பயணிகள் இந்த வழித்தடத்தைத் தான் பயன்படுத்தி வந்தனர். அவர்கள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தடம் எண்.41சி மாநகரப் பேருந்தை மீண்டும் இயக்க மாநகரப் போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ருக்மிணி நாராயணன், நொளம்பூர்.