சென்னையில் தனியார் நிறுவனங்களின் செட்-டாப் பாக்ஸ் மூலம் கேபிள் சேவை அளிக்கப்படுகிறது. ஆனால், அந்நிறுவனங்களின் சேவைகள் அனைத்து இடங்களிலும் கிடைப்பதில்லை. திருவொற்றியூரிலேயே ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு நிறுவனத்தின் சேவை உள்ளது. அதனால், வீடுகளை மாற்றும்போது சில ஆயிரம் செலவழித்து புதிய சேவையை பெற வேண்டியுள்ளது. இதனால், செலவுகள் அதிகரிக்கின்றன. எனவே, சென்னை முழுவதும் ஒரே விதமான செட்-டாப் பாக்ஸ்களை வழங்கி, அதை மாற்றாமலேயே பிற நிறுவனங்களின் சேவைகள் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பி.கே.ஈஸ்வரன், திருவொற்றியூர்.