சென்னை திருவான்மியூர் கல்கி கிருஷ்ணமூர்த்தி சாலை மருந்தீஸ்வரர் நகர் எதிரே அமைந்துள்ள மாநகராட்சி பூங்கா பராமரிப்பின்றி இருந்தது. இது குறித்து ஆராய்ச்சிமணி பகுதியில் செய்தி வெளியானது. தற்போது அந்த இடம் சுத்தம் செய்யப்பட்டு, அழகிய ஓவியங்கள் வரையப்பட்டு, ஸ்மார்ட் பைக்குகளை நிறுத்தும் இடமாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து அடையாறு டிப்போ சிக்னலில் வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு பாராட்டு } நன்றி!
- ஜி.இராஜகுரு, திருவான்மியூர்.