ஆவடி பெருநகராட்சி எல்லைக்குள்பட்ட தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு செக்டார் ஒன்றின் அருகில் உள்ள பருத்திப்பட்டு ஏரிக்கரையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. இங்கு காலை, மாலை வேளைகளில் ஏராளமானோர் நடைப்பயிற்சி செய்வதோடு, மாலை வேளையில் பொதுமக்கள் அதிகளவில் வந்து பொழுதைக் கழிக்கின்றனர். இந்தப் பூங்கா தற்போது முறையாகப் பராமரிக்கப்படாததால் புதர்கள் மண்டி கிடக்கின்றன. எனவே, இப்பூங்காவை தூய்மைப்படுத்தப்பட வேண்டும்.
-செ.பழனி, அம்பத்தூர்.