மடிப்பாக்கம் பிரதான சாலையிலிருந்து இறைச்சி மார்க்கெட் செல்லும் பாதையிலும், சாய் மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கு எதிரிலும் சிறிய மழைக்கே முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இப்பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க பெருநகர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எம்.எஸ்.இப்ராஹிம், மடிப்பாக்கம்.