சென்னை கொளத்தூர் குமரன் நகர் அஞ்சல் நிலையத்தில் ஒரே ஒரு கவுன்ட்டர் மட்டுமே இயங்குவதால் தபால் அனுப்ப வருபவர்கள், சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள், பண விடை (மணி ஆர்டர்) அனுப்ப வருபவர்கள் என அனைவரும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால், அஞ்சல் நிலையத்தில் எப்போதும் கூட்ட நெரிசல் காணப்படுகிறது. எனவே, தலைமை தபால் நிலையம் உள்பட பிற அஞ்சல் நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களை இங்கு இடமாற்றம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எம்.எஸ்.சுந்தரம்,
புது வண்ணாரப்பேட்டை.