பெரம்பூரில் திரு.வி.க.நகர் நிறுவப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதனைச் சுற்றி ராமமூர்த்தி காலனி, அன்பழகன் நகர், கிருஷ்ணா நகர், வெற்றி நகர் என பல நகர்கள் உருவாகி குடியிருப்புகள் பெருகி விட்டன. ஆனால், இங்கிருந்து அண்ணா சதுக்கம், பெசன்ட் நகர், தியாகராயநகர், திருவேற்காடு போன்ற பகுதிகளுக்குச் செல்ல நேரிடையான பேருந்து வசதிகள் இல்லை. இந்த தடத்தில் மாநகரப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுப்பார்களா?.
ஆ.ஜெயகிருஷ்ணன், திரு.வி.க.நகர்.