சென்னை, அண்ணா நகர் கிழக்கு கந்தசாமி நாயுடு ஆடவர் கல்லூரியின் பிரதான வாயிலருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் சுற்றுப்புறப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆதார் அட்டையில் செல்லிடப் பேசி எண், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களைச் செய்கின்றனர். இந்த அலுவலகப் பிரதான வாயிலில் ஒரு பிஎஸ்என்எல் அலுவலகமும் உள்புறம் ஒரு அலுவலகமும் இயங்கி வரும் நிலையில், ஆதார் அட்டையில் மாற்றம் செய்வது தொடர்பாக இந்த அலுவலகங்களுக்குச் செல்லும் மக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். எனவே, பிஎஸ்என்எல் உயரதிகாரிகள் பொதுமக்களின் சிரமத்தைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோதை நாயகி, அரும்பாக்கம்.