சென்னை அண்ணாநகர் பார்க் சாலையில் அமைந்துள்ள பெருநகர மாநகராட்சி பூங்காவில் பூட்டியே கிடக்கும் கழிப்பறையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க கோரி கடந்த 12.8.2019 தினமணி ஆராய்ச்சி மணி பகுதியில் செய்தி வெளியாகியிருந்தது. இதன் எதிரொலியாக மறுநாளே (13.8.2019) பூங்கா கழிப்பறையை திறந்து நடவடிக்கை மேற்கொண்ட மாநகராட்சி நிர்வாகத்துக்கும், செய்தி வெளியிட்ட தினமணி நாளிதழுக்கும் நன்றி, பாராட்டுகள்.
க.இளங்கோ, சென்னை-101.