திருவான்மியூர் பிள்ளையார் கோயில் தெருவில் சாலை போடுவதற்காக தோண்டப்பட்ட ரோட்டை இரண்டு மாதங்களாகியும் சீரமைக்காதது குறித்து தினமணி ஆராய்ச்சி மணி பகுதியில் அண்மையில் செய்தி வெளியானது.
இதன் காரணமாக ஒரே வாரத்தில் அங்கு தார்ச்சாலை அமைக்கப்பட்டது. பொது மக்கள் பிரச்னையை எதிரொலித்த தினமணிக்கும், இதில் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் பாராட்டுகள்.
ஜி.உதயகுமார், திருவான்மியூர்.