ஆவடியில் இருந்து மாங்காடு, குன்றத்தூர், அனகாபுத்தூர், பல்லாவரம் வழியாக சென்றுவந்த தடம் எண்.266 மாநகரப் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் மாங்காடு காமாட்சி அம்மன் கோயில், குன்றத்தூர் முருகன் கோயில் செல்லும் பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர். மாநகரப் போக்குவரத்துக் கழகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு மீண்டும் தடம் எண்.266 (தாம்பரம்-ஆவடி) பேருந்துகளை இயக்க வேண்டும்.
ஆர்.கோவிந்தராஜன்,
பல்லாவரம்.