வேகத்தடை தேவை

சென்னை நங்கநல்லூர் முதல் பிரதான சாலையும், 24-ஆவது தெருவும் சந்திக்குமிடத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.

சென்னை நங்கநல்லூர் முதல் பிரதான சாலையும், 24-ஆவது தெருவும் சந்திக்குமிடத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. மேலும், 24-ஆவது தெரு இருக்குமிடம் பள்ளமாக இருப்பதால், மழைக்காலத்தில் முதல் பிரதான சாலையில் பெய்யும் மழைநீர் 24-ஆவது தெரு, சாலை முனையில் தேங்கி சிறு குட்டைபோல் காட்சியளிக்கிறது. இதனால், இரு சாலை முனைகளிலும் வேகத்தடை அமைக்க வேண்டியது அவசியம். இதன் மூலம் மழைநீர் தேங்குவதும் தடுக்கப்படும். இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 டி.வி.கிருஷ்ணசாமி, நங்கநல்லூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com