சென்னை நங்கநல்லூர் முதல் பிரதான சாலையும், 24-ஆவது தெருவும் சந்திக்குமிடத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. மேலும், 24-ஆவது தெரு இருக்குமிடம் பள்ளமாக இருப்பதால், மழைக்காலத்தில் முதல் பிரதான சாலையில் பெய்யும் மழைநீர் 24-ஆவது தெரு, சாலை முனையில் தேங்கி சிறு குட்டைபோல் காட்சியளிக்கிறது. இதனால், இரு சாலை முனைகளிலும் வேகத்தடை அமைக்க வேண்டியது அவசியம். இதன் மூலம் மழைநீர் தேங்குவதும் தடுக்கப்படும். இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டி.வி.கிருஷ்ணசாமி, நங்கநல்லூர்.