சென்னை மடிப்பாக்கம் சதாசிவம் நகர் 4-ஆவது இணைப்புச் சாலையில் தெரு விளக்குகள் பல மாதங்களாக எரியவில்லை. இதனால், இந்த வழியே இரவு நேரங்களில் பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. அதேபோல, சதாசிவம் நகர் 3-ஆவது குறுக்குத் தெருவில் சாக்கடை நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இப்பிரச்னைகளை தீர்க்க பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே.ரமேஷ், மடிப்பாக்கம்.