பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 14-க்கு உட்பட்ட மடிப்பாக்கம் பகுதியில் பல்வேறு தெருக்களில் மின் கம்பங்கள் பயனில்லாமல் இருக்கின்றன. மேலும், இந்தக் கம்பங்களில் உள்ள கேபிள்களும் ஒயர்களும் ஆங்காங்கே தொங்குகின்றன. இதனால், எப்போது விபத்துகள் நேரிடுமோ என்ற அச்சத்துடன் பொதுமக்கள் சாலைகளில் நடக்க வேண்டியுள்ளது. எனவே, தேவையற்ற மின்கம்பங்களை அகற்ற தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எம்.எஸ்.இப்ராஹிம், மடிப்பாக்கம்.