சென்னை திருவொற்றியூர் பெரியார் நகரில் பிரதான சாலை ஒன்றுதான் அகலமானதாக உள்ளது. அண்மையில் இந்த சாலையின் இடதுபுறத்தில் அம்மா உணவகம், இ-சேவை மையம், துப்புரவுப் பணியாளர் அலுவலகம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. சாலையின் வலதுபுறத்தில் அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களும், தலைவர்களின் சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் சாலை ஏற்கெனவே குறுகலாகக் காணப்படுகிறது. இதற்கிடையில், சாலையை மறித்து பிரம்மாண்ட மேடைகள் அமைத்து, அடிக்கடி கூட்டங்கள் நடத்தப்படுவதால் பெரியார் நகர் வழியாக யாரும் எளிதாகச் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே, பெரியார் நகர் பிரதான சாலையில் கூட்டங்கள் நடத்த காவல்துறை தடை விதிக்க வேண்டும்.
- கவியழகன், திருவொற்றியூர்.