சென்னை, கோட்டூர் பெருமாள் கோயில் தெருவில் வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள குழாய்களில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக குடிநீர் வருவதில்லை. இதுகுறித்து தமிழ்நாடு குடிநீர் வாரியப் பணியாளர்களிடம் கேட்டும் எந்தப் பதிலும் இல்லை. மேலும், பகுதி- 172- செயற்பொறியாளரிடம் முறையிட்டும் பயனில்லை. இதில் தமிழ்நாடு குடிநீர் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, எங்கள் தெருவில் உள்ள 25 வீடுகளுக்கு குடிநீர் கிடைக்க வழி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
-ஆ.சிவசண்முகம், கோட்டூர்.