சென்னையை அடுத்த கோவிலம்பாக்கம் துணை மின் நிலையத்தில் மின்கட்டணம் செலுத்த இரண்டு கவுன்ட்டர்கள் உள்ளன. ஆனால் ஒரு கவுன்ட்டர் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. இதனால் நுகர்வோர் நீண்ட வரிசையில் காத்திருந்து, மின் கட்டணத்தைச் செலுத்தும் நிலை உள்ளது. இதனால் நேரம்
விரயமாகிறது. எனவே, செயல்படாத மற்றொரு கவுன்ட்டரையும் இயக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பி.கம்பர் ஒப்பிலான், கோவிலம்பாக்கம்.