சென்னை கொரட்டூர் வடக்கு ரயிலடி அஞ்சலக எல்லைக்கு உள்பட்ட எந்தத் தெருவிலும் தபால் பெட்டி வைக்கப்படவில்லை. ரயில் நிலையம் அருகில் இருக்கும் அஞ்சலகத்திற்கு போய்தான் தபால்களைப் பெட்டியில் போட வேண்டியுள்ளது. இதனால் நேர விரயமாவதோடு, தனியார் கூரியர் சேவைகளை நாட வேண்டியுள்ளது. எனவே, தபால் பெட்டிகளை வைக்க அஞ்சலகத் துறை ஏற்பாடு செய்ய வேண்டும்.
- சா.சுயம்பிரகாசம், கொரட்டூர்.