சென்னை, சைதாப்பேட்டை பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் முதியோர், நோயாளிகள் உள்ளிட்டோர் இரவு நேரங்களில் தூக்கமின்றி தவிக்கின்றனர். குறிப்பாக, தேர்வு நெருங்கும் நேரத்தில் கொசுக்கடியால், மாணவர்கள் பலவித நோய்களால் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி , சைதாப்பேட்டை பகுதியில் கொசு மருந்து தெளிக்க, பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
இரா.எத்திராஜன், சைதாப்பேட்டை மேற்கு.