பெருநகர சென்னை மாநகராட்சி 107-ஆவது வார்டில் உள்ள சுப்பிராய கிராமணி தெரு, வெங்கடாஜலபதி தெரு ஆகியவற்றில் இரண்டு மாதங்களுக்கு முன்பு புதிதாக மழைநீர் வடிகால்கள் கட்டப்பட்டன. ஆனால், அவற்றில் எந்த இடத்திலும் மழைநீர் சென்று சேரக்கூடிய வசதியில்லை. இதனால், மழைக்காலங்களில் பழையபடி தெருக்களில் மழைநீர் தேங்கும் நிலையே நீடிக்கும். எனவே, இரண்டு வடிகால்களையும் சீரமைத்துத் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆர்.தியாகராஜன், ஷெனாய் நகர்.