மைதானத்தில் பெயர் பலகை வைக்கப்படுமா?

பெருநகர சென்னை மாநகராட்சி 137-ஆவது வார்டு, கே.கே.நகர் 61-ஆவது தெருவில் மாநகராட்சிக்குச் சொந்தமான காலி மைதானம் உள்ளது.


பெருநகர சென்னை மாநகராட்சி 137-ஆவது வார்டு, கே.கே.நகர் 61-ஆவது தெருவில் மாநகராட்சிக்குச் சொந்தமான காலி மைதானம் உள்ளது. இந்த மைதானத்துக்கு வெளியே இதுவரை எந்தப் பெயர் பலகையும் வைக்கப்படவில்லை. காலி மைதானமாக இருப்பதால், குறிப்பிட்ட நேரம் மட்டுமின்றி, எந்நேரமும் இங்கு விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இதனால், மைதானத்தின் அருகே வசிப்பவர்களுக்கு தொந்தரவு ஏற்படுகிறது. எனவே, விளையாடும் நேரத்தை முறைப் படுத்துவதோடு, இந்த இடத்தில் பெயர் பலகை வைத்து பூங்கா அமைத்தால், பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும், பொழுதுபோக்கவும் பயனுள்ளதாக இருக்கும்.

மு.முனுசாமி, கே.கே.நகர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com