சென்னை கொளத்தூர் பூம்புகார் பகுதியில் கடந்த பல நாள்களாக குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளன. பெருநகர மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் அங்கு தினசரி குப்பைகளை எடுக்காமல் இருப்பதால் சாலையோர குப்பைத்தொட்டி நிரம்பி வழிகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரச் சீர்கேடும், சுற்றுச்சூழல் மாசும் ஏற்படுகிறது. இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கே.தருண், கொளத்தூர்.