சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு அதிகாலை 3.40 மணிக்கு சேலம்}சென்னை விரைவு ரயில், 4.15 மணிக்கு உழவன் எக்ஸ்பிரஸ் ஆகியவை வந்து சேருகின்றன. ஆனால், எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து நகரின் மற்ற பகுதிகளுக்குச் செல்லும் மாநகரப் பேருந்துகள் அதிகாலை 5 மணிக்குப் பிறகே இயக்கப்படுவதால், சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே, இரவு 10 மணிக்கு மேல் 5 மணி வரை இயக்கப்படும் இரவு நேர மாநகரப் பேருந்துகளை, எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இயக்க மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், காலை 6 மணிக்கு மேல் 9 மணி வரையுள்ள நெருக்கடியான நேரத்தில் கூட்டம் அதிகமாக உள்ளதால், மினி பேருந்துகளை இயக்கவும் நடவடிக்கை எடுக்கலாம்.
சி.உஷாராணி,
காலடிபேட்டை.