ஆவடி மாநகராட்சி 24}ஆவது வார்டு புதிய ராணுவச் சாலை பாரதிதாசன் திருமண மண்டபம் முன்புறம் குப்பைகளும் கட்டடக் கழிவுகளும் இரண்டு மாதங்களுக்கு மேல் அகற்றப்படாமல் உள்ளன. தற்போது மழையால் துர்நாற்றம் ஏற்பட்டு, நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, குப்பைகளை உடனடியாக அகற்றி தொற்று நோயில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க, ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே.கனகவேல், ஆவடி.