அரசுத் துறைகளான உணவுப் பொருள் வழங்கல் துறை, மின்துறை, குடிநீர் வாரியம், தொழிலாளர் நலத் துறை, அஞ்சல் துறை போன்றவை மாதந்தோறும் குறைதீர் கூட்டங்களை நடத்தி வருகின்றன. அதேபோல, பெருநகர சென்னை மாநகராட்சியும் வார்டுகள் தோறும் பொதுமக்கள் குறைதீர் கூட்டங்களை நடத்தினால் குறைகளை அவ்வப்போது கேட்டறிந்து களைய முடியும். இதற்கு மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.
எம்.முனுசாமி, சென்னை-78.