திருவெற்றியூர் ரயில் நிலையத்தின் முன் பகுதி இடிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் குறிப்பாக முதியவர்கள் பயணச்சீட்டு வாங்குவதற்காக மாட்டுமந்தை கேட் பகுதிக்கு மேடு பள்ளங்களைக் கடந்து செல்கின்றனர். மேலும், பயணச்சீட்டு கொடுக்கும் இடத்தருகே இருந்த படிக்கட்டுகளும் இடிக்கப்பட்டுவிட்டதால், அருகிலிலுள்ள மதில் சுவரைக் கடந்து நடைமேடைக்குச்சென்று ரயிலைப் பிடிக்க சிரமப்படும் நிலை உள்ளது. எனவே, நடைமேடையிலேயே ரயில்வே நிர்வாகம் தானியங்கி பயணச்சீட்டுப் பெறும் வசதியை ஏற்படுத்த வேண்டும்.
- ஈ.கல்யாணஈஸ்வரன், திருவொற்றியூர்.