ஆராய்ச்சிமணி
பழைய புத்தகங்கள் வாசகர்களுக்கு விற்கப்படுமா?
அனைத்து மாவட்ட/ கிளை நூலகங்களிலும் பழைய, மக்கிய புத்தகங்களை எடைக்கு விற்க கட்டிவைத்துவிட்டு, வாசகர்கள் படிப்பதற்காக புதிய புத்தகங்கள் வைக்கப்படுகின்றன.
அனைத்து மாவட்ட/ கிளை நூலகங்களிலும் பழைய, மக்கிய புத்தகங்களை எடைக்கு விற்க கட்டிவைத்துவிட்டு, வாசகர்கள் படிப்பதற்காக புதிய புத்தகங்கள் வைக்கப்படுகின்றன. பழைய புத்தகங்களை எடைக்குப் போடுவதற்குப் பதில், ஒரு புத்தகம் ரூ. 5 என்ற விலையில் வாசகர்களிடம் விற்றால், லட்சக்கணக்கான தொகை அரசுக்குக்கிடைக்கும். பழைய புத்தகங்களில், பல அபூர்வ நாவல்கள், கட்டுரை புத்தகங்கள், ஆன்மிக புத்தகங்கள் காணப்படுகின்றன. எனவே, பழைய புத்தகங்களை எடைக்கு விற்பனை செய்யாமல், வாசகர்களிடம் விலைக்குக் கொடுக்க நூலகத்துறை இயக்குனர் ஆணை பிறப்பிக்க வேண்டும்.
சண்முக சுப்பிரமணியன்,